மார்ச் 1 -ல் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும்,  25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்கான, விழா ஏற்பாடுகள் குறித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முதலமைச்சரை வரவேற்பது மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Exit mobile version