ரொனால்டோ vs மெஸ்சி; விராட் கோலியின் பதில்

இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட் போட்களுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் விராட் கோலி, கால்பந்து விளையாடுவதில் அதிக விருப்பமுடையவர். இந்நிலையில், உலக கால்பந்து அரங்கில் பிரபல வீரர்களாக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்சி ஆகிய இருவரில் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? என்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த விராட் கோலி, இது ஒரு கடினமான கேள்வி என்று தெரிவித்தார். ஆனால், நான் பார்த்த வரை கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு முழுமையடைந்த வீரர் என்று குறிப்பிட்டார். மேலும், இடது, வலது பக்கமாக பந்தை வேகமாக நகர்த்தி செல்லும் திறனில் அவர் ஆச்சரியப்படுத்துகிறார் என்றும் நான் இதுவரை, ரொனால்டாவைக் காட்டிலும் சிறந்த கோல்கள் போடுபவர்களை பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட்டில் ஏற்படுத்திய புரட்சியை அனைவரும் பின் தொடர்கிறார்கள் என்று கூறிய விராட் கோலி, அவர் இருக்கும் இடம் சிறப்பானது என்று தெரிவித்தார். நான் எனது அணிக்காக தேர்வு செய்யும் வீரர், தனது முழு ஆற்றல் மற்றும் தீவிரத்தை தருபவராக ஒருவர் இருக்குமானால், அது கிறிஸ்டியானோ ரொனால்டோவாகத் தான் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

லியோனல் மெஸ்சி குறித்து பதிலளித்த விராட் கோலி, இது ஒது தனிப்பட்ட விருப்பம் தான் என்றும் மெஸ்சி குறும்புத்தனம் கொண்டவர் என்று குறிப்பிட்டார். மேலும், இயற்கையான திறன் பெற்றுள்ள அவரைபோல் வேறொருவரையும் பார்க்க முடியாது என்து தெரிவித்தார்.

என்னைப் பொறுத்த வரை விளையாட்டின் ஒவ்வொரு நிமிடங்களிலும் திறனை வெளிப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட விராட் கோலி, ரொனால்டோவின் ஆட்டம்தான் மற்ற வீரர்களிடம் இருந்து அவரை பிரித்து காட்டுகிறது. மேலும், உயர்மட்டத்தில் விளையாடும் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள் தான். ஆனால், ரொனால்டோவிடம் இருக்கும் திறமை மற்ற வீரர்களிடம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version