விராட் கோலி சதம்..75 வது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார் விராட்!..கிங் இஸ் பேக்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் மேட்ச் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். ஒரு வருடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் சதமடித்த நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சுப்மன் கில். தற்போது இன்றைக்கு விராட் கோலி நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட்டில் தன்னுடைய 28வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன் விளைவாக சர்வதேச அரங்கில் தன்னுடைய 75 வது சதத்தைப் பூர்த்தி செய்தார், மேலும் 75 சர்வதேச சதத்தினை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் கோலி அடைந்தார். முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.india vs england test update, சதம் எடுத்தே ஆகணும், படுமோசமான சாதனையை  முறியடிப்பாரா கோலி? - virat kohli is forced to score a century in the third  test - Samayam Tamil

இந்த சதத்தினை அடிப்பதற்கு விராட் கோலி 240 பந்துகளை எடுத்துக்கொண்டார். ஐந்து பவுண்டரிகளை மட்டுமே அடித்துள்ள கோலி மற்ற அனைத்து ரன்களையும் ஓட்டத்திலேயே எடுத்துள்ளார். இந்த சதத்தின் மூலம் தன்னுடைய பழைய பார்மை டெஸ்ட்டில் மீட்டெடுத்துள்ளார். கோலியின் இரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 

Exit mobile version