பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை சுத்தம் செய்த மாணர்வகள்

விழுப்புரத்தில், பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீரை மாணவர்கள் சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் பி.என் தோப்பு பகுதியில் அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் வளாகத்திற்குள் குளம்போல் மழை நீர் தேங்ககியுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தேங்கிய மழை நீரை சுத்தம் செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் சுத்தம் செய்துள்ளனர். இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பெற்றோர், பள்ளித் திறப்பதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஆசிரியர்களின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version