கழிவறையை சுத்தம் செய்ய வைத்த போலீஸ்..விரக்தியில் இளைஞர் தற்கொலை முயற்சி!

வில்லிவாக்கம் ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் வெற்றிவேல் என்பவர் கூட்டம் காரணமாக ரயிலில் தொங்கியபடியே சென்றுள்ளார். அப்போது இரயில்வே காவல்துறையினர் அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு பெயிண்ட் அடிக்க கூறினர். பிறகு கழிவறையைச் சுத்தம் செய்ய ஆணையிட்டனர். இதனால் மனம் நொந்துபோன இளைஞர் வெற்றிவேல் லைசாலைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெற்றிவேல் குடும்பத்தினர் வில்லிவாக்கம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version