குழந்தைகளுக்கு படிப்பை தொடங்கி வைத்த பெற்றோர் !

விஜயதசமியையொட்டி சென்னையில் உள்ள கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் விஜயதசமியை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க நாக்கில் தங்க ஊசியால் ”ஓம்” என எழுதியும், வித்யாரம்பம் எண்ணும் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு பச்சரிசியில் தமிழ் அச்சாரங்கள் எழுத பெரியவர்கள் முதல் அனைத்து வயதினரும் கற்றுக் கொடுத்தனர்.

Exit mobile version