தமிழக அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களிடம் தொடர்ந்து பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் மெல்வின் தலைமையில் மகப்பேறு பிரிவு, எக்ஸ்ரே, ஸ்கேன், பொது சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது. 

Exit mobile version