விடியா அரசு மக்களை ஏமாற்றுகிறது – முன்னாள் அமைச்சர் தங்கமணி!

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துக் கொண்டனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தற்போதைய ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி இல்லை என்றும் பெரும் பணக்காரர்களுக்கான ஆட்சி என்று விமர்சித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், விடியா அரசுக்கு எதிராக எந்த போராட்டமும் செய்யாமல் மவுனம் காத்து வருவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Exit mobile version