மருத்துவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் விடியா அரசு !

மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் டீன்-ஆக பணியாற்றி வரும் நிலையில் மாநிலத்திலுள்ள 36 மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார். ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் டீன் ஆக பொறுப்பு வகிக்கும் ஒருவரால், மற்ற மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை எவ்வாறு செயல்திறனோடு கவனித்துக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் சங்க தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாமல் மூத்த மருத்துவர்களுக்கே கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Exit mobile version