குடியரசுத் துணை தலைவர் திண்டுக்கல் வருகை – 1,700 போலீசார் குவிப்பு!

திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள காந்தி கிராம பல்கலைகழக கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.

அவர் வருகையையொட்டி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் வருகை தர உள்ளதால் ஹெலிகாப்டர் தரைத் தளத்தில் தரை இறங்குவது போல ஒத்திகை நடைபெற்றது. 

பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல், தேனி , மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர்கள் 16 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் 35ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இன்று முதல் கல்லூரி வளாகம் மத்திய பாதுகாப்பு படை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.        

Exit mobile version