பழம்பெரும் இந்தி நடிகை சுரேகா சிக்ரி காலமானார்

ஒருமுறை தேசிய விருது வாங்குவதுதான் என் லட்சசியம் என்று குறிக்கோளுடன் வாழும் நடிகர் நடிகைகளுக்கு மத்தியில் மூன்றூ முறை தேசிய விருது வாங்கிய பழம்பெரும் நடிகைதான் சுரேகா சிக்ரி. இவரை இன்றைய தினம் இழந்திருக்கிறது கலையுலகம்.

1978இல் தொடங்கி கடந்த சில மாதங்கள் வரையிலும் நடித்துக் கொண்டிருந்த இந்தக் கலையரசிக்கு, தலையில் காயம்பட்டதுதான் வினையாகப் போனது.

தலையில் பட்ட காயத்தால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சில மாத காலம் சிகிச்சையில் இருந்த சிக்ரிக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்த மாரடைப்ப்பாலும், வயது மூப்பின் காரணமாகவும் தற்போது  சுரேகா சிக்ரி இன்று உயிரிழந்தார். தற்போது இவருக்கு வயது 75 என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு திரையுலக, கலையுலக பிரபலங்கள் மட்டுமன்றி அரசியல்வாதிகளும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version