வண்டாம்பாளையம் கோயில் திருவிழா விவகாரம்: பேச்சுவார்த்தை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளையம் மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோயில் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க அறநிலையத்துறை காலஅவகாசம் கேட்டநிலையில், பேச்சுவார்த்தையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி கோயில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதால் திருவிழா நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version