ஆர்.எஸ்.புரம் பகுதியில் விரைவாக ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படவுள்ளது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள 16 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 129 மடிகணினிகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார். விழாவில் பேசிய அவர், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி வருவதாகவும், இது போன்ற திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்றும் கூறினார். ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அனைத்து பள்ளிகளுக்கும்  வினாடி-வினா புத்தகம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

 

Exit mobile version