புத்தாண்டையொட்டி சென்னையின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனை

புத்தாண்டையொட்டி சென்னையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புத்தாண்டு வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, அண்ண சாலை, மெரினா, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Exit mobile version