வால்பாறை, அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம்

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உறைபனி நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாய்லாந்து வளைகுடாவில் உருவான பபுக் புயல் அந்தமானில் இன்று கரையை கடக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் வால்பாறை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி நிலவும் என்றும், தமிழகம் மற்றும் புதுசேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் அதிகமாக இருந்த உறைபனி இன்று குறையும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version