வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.
 
Exit mobile version