திருமாவளவனுக்கு ஆதராவாக நடந்த பிரசாரத்தில் உளறிய வைகோ

சிதம்பரம் தொகுதியில் சின்னத்தை மாற்றி வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் திருமாவளவனுக்கு ஒதுக்கப்பட்ட பானை சின்னத்திற்கு பதிலாக குடம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பிரசாரம் செய்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதோடு, சின்னத்தை கூட சரியாக சொல்ல முடியாத தலைவர் வைகோ என்று கூட்டணி கட்சியினர் விமர்சித்தனர்.

Exit mobile version