KGF-2வில் இணைந்தார் வட சென்னை நடிகர்

கன்னட படத் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடந்த வருடம் பெரிதும் பேசப்பட்ட படம் ‘கேஜிஎப்’. கதாநாயகனாக யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். மேலும், தமன்னா, மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கினார்.

இப்படத்திற்கு பெரிதும் பலமாக பார்க்கப்பட்டது அதிரடி சண்டைக் காட்சிகள், தூள் களப்பும் வசனங்கள் மற்றும் பின்னணி இசையமைப்பும் தான். படம் வெளியாகும் முன்பாகவே, படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க படக்குழுவினர் முடிவெடுத்திருந்தனர். அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியடையும் வகையிம், யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.

இந்நிலையில், ‘கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்டர்கள் வெளியானது. இதில், முன்னணி இந்தி நடிகரான “சஞ்சய் தத்” இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் போஸ்டர்களும் வெளியானது. இந்நிலையில், தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் மாஸ் காட்டிய இளம் நடிகர் சரண், ‘கேஜிஎப்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

வடசென்னையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு தம்பியாக நடித்திருந்தார். தனுஷ்-யுடன் படம் முழுவதும் பயணிக்கும் சரண், தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கண்களை தன் மீது விழவைத்தார். ஏற்கனவே, தமிழில் வெளியான கடல், ஜில்லா படத்தில் சரண் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘கேஜிஎப்’ திரைப்படம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது. இப்படத்திற்கு அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

Exit mobile version