உத்ரகாண்டில் நிலநடுக்கம்!

உத்ரகாண்ட் மாநிலத்தில் பிரோதோகார் நகரிலிருந்து சரியாக 23 கி,மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இன்று காலை ஒன்பது மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட அந்தப் பகுதியில் நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிக்கையானது அறிவித்திருக்கிறது.

நில நடுக்கம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் வசிக்கக் கூடிய மக்கள் திடீரென அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே உத்ரகாண்டில் சில பகுதிகள் நிலப்பகுதியில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நில நடுக்கத்தின் விளைவாக கட்டிடங்களும், வீடுகளும் லேசாக விரிசல் விட்டு உள்ளன. பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

Exit mobile version