மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் புகார்கள், அரசியல் சதியா? – காங்கிரஸ் கடுப்பு

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பெண் பத்திரிகையாளர்கள் மீடூ என்ற ஹேஷ் டேக்கில் பாலியல் தொல்லை புகாரை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்த புகார்களை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடப்பதாக எம்.ஜே அக்பர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் எம்.ஜே. அக்பரின் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, “12-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொல்லை தொடர்பான அனுபவங்களை தெரிவித்துவரும் நிலையில் இதனை எப்படி அரசியல் சதியாக கூறமுடியும்? என வினவியுள்ளார். அரசு பாலியல் வன்முறையாளர்களை பாதுகாக்கிறது, ஊக்குவிக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version