இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு 30 லட்ச ரூபாய் நிதியுதவி – மத்திய அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங் அறிவிப்பு

சத்தீஷ்கார் மாநிலம் பிலாய் நகரில் உள்ள மத்திய அரசின் ‘செயில்’ நிறுவனத்துக்கு சொந்தமான இரும்பாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயம் அடைந்த நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிலாய் சென்ற சவுத்ரி பிரேந்திர சிங், வெடிவிபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தவிபத்தில் பலியானவர்களில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும், அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவும் ‘செயில்’ நிறுவனத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version