புயலை எதிர்கொள்ள மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரப் பணி ஆகியன தயார் – ஆர்.பி. உதயகுமார்

கரையை கடக்கும் கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் பாம்பன்- நாகை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை எழிலகத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வங்கக் கடலில் மையம் கொண்ட இந்தப் புயல் வேகமாக நகர்ந்துவரும் நிலையில், 4 ஆயிரத்து 300 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

22 ஆயிரத்து 492 மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

 

 

 

Exit mobile version