ஒரு மணிநேரத்தில் 161 அம்புகள் எய்து உலக சாதனைப் படைத்த 2 வயது சிறுமி

திருச்சியை சேர்ந்த இரண்டு வயது சிறுமி தொடர்ச்சியாக 161 அம்புகளை எய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

திருச்சியை சேர்ந்த சகாயவிஜய் ஆனந்த்-ஜெயலட்சுமி தம்பதியரின் இரண்டு வயது மகளான ஆராதனா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட வில் வித்தை போட்டிகளை ஆர்வமுடன் பார்த்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அச்சிறுமியை பயிற்சி மையத்தில் சேர்த்து வில் வித்தை பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக 2 வயதிலேயே 10 மீட்டர் தூரத்திலிருந்து இலக்கை நோக்கி அம்புகளை எய்தக் கூடிய திறனை ஆராதனா பெற்றுள்ளார்.

இந்தநிலையில் சிறுமி ஆராதனா புதிய சாதனை முயற்சியை மேற்கொண்டார். அதன்படி ஒருமணி நேரத்தில் 161 அம்புகளை எய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சிறுமியின் இந்த சாதனை ஆர்ச்சரி வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 

Exit mobile version