ஆரணியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து சேவூர் பகுதியில் ஆரணி நகர காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்துடன் நடந்து சென்றுள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், ஒருவரின் பெயர் சத்தியா என்பதும் மற்றொருவர் கருணாகரன் என்பதும் அவர்கள் தொடர்ச்சியாக வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 15 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

Exit mobile version