ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

புல்வாமா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹபூ என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீடு ஒன்றில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Exit mobile version