இரண்டு மது ஆலை நிறுவனங்கள், ரூ.700 கோடி வரிஏய்ப்பு மோசடி

தமிழகத்தைச் சேர்ந்த மதுஆலை உள்பட இரண்டு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்தது வைத்திருந்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மது ஆலை ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 6-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 55 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 6 ஆண்டுகளாக 400 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருப்பதும் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவில் மூலப்பொருட்கள் வாங்கியிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம் 300 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் காரில் எடுத்துச் செல்ல முயன்ற 4 கோடியே 50 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version