கொடைக்கானலில் லாரி-இருசக்கர வாகனம் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

கொடைக்கானல் ஏரி சாலை அருகே இருசக்கர வாகனமும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது ஏரிச்சாலை அருகே சென்றுக்கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற வினோத், பிரசாந்த் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நவீன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version