மாதவரத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி

சென்னை புழல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதிய விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.

திருமுல்லைவாயலை சேர்ந்த மிளகாய் வியாபாரிகள் டில்லிபாபு, ஆனந்தன் ஆகியோர் வியாபாரம் தொடர்பாக இருசக்கர வாகனத்தில் மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version