காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

சோபியான் மாவட்டத்தில் பொன்பஜார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற பாதுகாப்புபடை வீரர்கள், அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக படை வீரர்களும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி முன்னா லகோரி என தெரிய வந்துள்ளது. காஷ்மீரில் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னணியாக இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version