காக்கிநாடா துறைமுகத்தில் இரண்டு கிரேன்கள் கீழே விழுந்து விபத்து

ஆந்திர பிரதேசம் காக்கிநாடா துறைமுகத்தில் கிரேன்கள் கீழே விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காக்கிநாடா துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் இரண்டு கிரேன்களை துறைமுக ஊழியர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கப்பலில் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்த இரண்டு கிரேன்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பயங்கர சத்தத்துடன் 2 கிரேன்களும் திடீரென்று கீழே விழுந்தன. இதில் துறைமுக ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version