சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை பள்ளியில் ஒப்படைத்த மாணவிகள்

திருச்சி அருகே, சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை ஆசிரியரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருச்சியை அடுத்த புங்கனூரில் புனித வளனார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி தாயனூர் மேலக்காடு அருகே சென்றபோது, அந்த பேரணியில் கலந்து கொண்ட நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கனிஷ்கா, மதுஸ்ரீ ஆகிய மாணவிகள் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டை கண்டுள்ளனர். இதையடுத்து, அந்த பணத்தை எடுத்த மாணவிகள், தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் இன்று திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மாணவிகளின் இச்செயல், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்வதால், மாணவிகள் இருவரையும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

Exit mobile version