இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்ய உறவினர்கள் கோரிக்கை

தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை விடுவிப்பது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரை சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த அந்தோணி, ரூபின்சன் உள்ளிட்ட 8 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை துதரை 8 பேரின் மீனவர்கள் சந்தித்தனர். கிறுஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version