விவி மினரல்ஸ் வைகுண்டராஜனிடம் பணம் வாங்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி – டிடிவி தினகரன் ஆவேசம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக விவி மினரல்ஸ் வைகுண்டராஜனிடம் பணம் வாங்கியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது டிடிவி தினகரன் ஆவேசமடைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆர்.கே. நகர் தேர்தலின்போது விவி மினரல்ஸ் நிறுவனம் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்தது குறித்து நியூஸ் ஜெ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத தினகரன், ஆவேசமாக பதிலளித்துவிட்டு, அங்கிருந்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தார்.
தினகரனை நம்பி பதிவியிழந்த18 எம்.எல்.ஏ.க்கள் அவரிடமிருந்து விலகத் தொடங்கியுள்ளனர். அதேபோல் வெளியிலிருந்து அவரை ஆதரித்த 3 எம்.எல்.ஏ.க்களும் தற்போது பின்வாங்கிவிட்டனர். இதுபற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, 18 எம்.எல்.ஏ.க்களுடன் கருத்து வேறுபாடு இல்லை என்று தினகரன் மழுப்பலாக பதிலளித்தார்.

Exit mobile version