கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் பழுது

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. 2 அணு உலைகளிலும் தலா ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில், எரிபொருள் நிரப்பும் பணிக்காக, நேற்று முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனிடையே, 2வது அணு உலையில் உள்ள குழாயில் இன்று பழுது ஏற்பட்டது. இதன்காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 2வது அணு உலையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில், ஊழியர்கள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version