திருச்சி கொள்ளிடம் பால விரிசலை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால்,  ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தில், விரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விரிசலால்  கொள்ளிடம் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த பாலத்தை சீரமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்  கோரிக்கை விடுத்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், ராணுவ உதவியுடன் பாலத்தை உடனடியாக சீரமைக்க  வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version