நண்பர்களுடன் வீடியோ எடுத்தவாறு பயணம் – மாணவர் மரணம்

தஞ்சாவூரில் நண்பர்களுடன் வீடியோ எடுத்தவாறு இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவன் பேருந்து மீது மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்த சூர்யா என்ற மாணவர் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தை உணராமல் தனது இரு நண்பருடன் வீடியோ எடுத்தவாறு பயணம் மேற்கொண்டார். தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே நின்று கொண்டிருந்த பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த சூர்யா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவர் கடைசியாக எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், உடன் பயணம் செய்த நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version