தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர், ஆசியா மரியம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் மேகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜய கார்த்திக்கேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், நாகை மாவட்ட ஆட்சியராக பிரவீன் கே.நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version