பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருக்க மாணவர்களுக்கு பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மக்கள் நலனை கருத்தில்கொண்டு தமிழக அரசு குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்கி வருவதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி மாதம் முதல் பாலித்தின் பைகளை பயன்படுத்த கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டார்.

இது பள்ளி கல்வித்துறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்காக மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version