திருச்சியில் புதிதாக ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி

புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்கள் சாலை போக்குவரத்து விதிகளை முழுமையாக தெரிந்து கொள்ள வசதியாக இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்காவில், புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சாலை விதிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.

18 வயது நிரம்பியவர்கள், புதிதாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், புதிதாக உரிமம் பெற விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் சாலை விதிகள் தொடர்பாகவும், சாலையிலுள்ள உத்தரவு குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள், தகவல் குறியீடுகள் போன்ற துண்டு பிரசுரங்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கினார். இதில் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார்.

Exit mobile version