அரசு கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா

திருவொற்றியூரில் உள்ள அரசு கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழாவில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சென்னை, திருவொற்றியூரில் உள்ள அரசு கல்லூரியில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய உணவுகள் சமைத்தும், அறிவு சார்ந்த விளையாட்டுகளும் வெளிப்படுத்தும் விதமான நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டது. அழகுக் கலை, அசைவ உணவு, சத்துள்ள தானிய உணவு, இனிப்பு வகைகள்,மருதாணி வைத்தல், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும் வகையில் பாக்குமட்டை ஐஸ் குச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

Exit mobile version