குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !

குற்றால அருவியில் நீர் வரத்து குறைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று நீர்வரத்து சீரானதால் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version