பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டு விவகாரத்தில், இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீர்குலைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். கருப்பு பணம் ஒழித்தல், பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல்,கள்ள நோட்டுக்களை அழித்தல் ஆகிய 3 நோக்கங்களையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காக மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் நாளை 9-ம் தேதி, காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும் என மணீஷ் திவாரி தெரிவித்தார்.

Exit mobile version