+2 தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முதல் மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முதல் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்தநிலையில் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வாளர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்தின் விடைத்தாள் நகலுக்கு 275 ரூபாயும், ஒரு பாடத்திற்கான மறுகூட்டலுக்கு 205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version