நாளை நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்காக குதிரைகளுக்கு தீவிர பயிற்சி

ஆத்தூரில் நாளை குதிரை ரேக்ளா நடைபெற உள்ளதால் குதிரை வண்டி உரிமையாளர்கள் தீவிர பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குதிரைப்பந்தயம் நடைபெறுவது வழக்கம். இதில் திருச்சி, மதுரை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குதிரைகள் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. போட்டியின் போது எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் போட்டியில் வெற்றி பெற அதற்கான சோதனை ஓட்டத்தை காந்தி சிலை, விநாயகபுரம் நரசிங்கபுரம் , செல்லியம்பாளையம் வழியாக நடத்தினார்கள்.

Exit mobile version