கன்வேயர் பெல்டில் சிக்கிய குழந்தையை மீட்ட விமான நிலைய அதிகாரிகள்

 

அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில், கன்வயர் பெல்டில் சிக்கிய குழந்தை, அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில், 4 வயது சிறுவன் ஒருவன், விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்காக தனது தாயுடன் வந்திருந்தான். அப்போது பயணிகள் உடமைகள் சோதனையிடும் இடத்தில் இருந்த கன்வயர் பெல்டில் ஏறி விளையாட முயன்ற அச்சிறுவன், கன்வயர் பெல்டில் இழுத்துச் செல்லப்பட்டான்.

அச்சிறுவனை மற்றொரு பகுதியில் இருந்த அதிகாரிகள் ஓடிச்சென்று தூக்கினர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் அந்த சிறுவனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version