தமிழகம் முழுவதும் இன்று குரூப் – 2 தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ள குரூப் – 2 தேர்வை 6 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையர், உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்- 2 தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலியாக உள்ள ஆயிரத்து 199 பணியிடங்களுக்கு, மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆண்கள் 3 லட்சத்து 54 ஆயிரத்து 245 பேரும், பெண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்,1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேர் ஆங்கில வழியில் எழுத உள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு, 1 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 400 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

 

Exit mobile version