டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம்: 4 பேருக்கு போலீஸ் காவல்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில், காவலர் சித்தாண்டி உட்பட 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, மொத்தம் 47 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர். குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் கைதுசெய்யப்பட்ட காவலர் சித்தாண்டி, முத்துகுமார், விமல்ராஜ், சுதாராணி ஆகியோர், குரூப்-4 தேர்வு முறைகேட்டிலும் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பின்னர், அவர்களை பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Exit mobile version