சர்வதேச கராத்தே போட்டியில் தமிழக மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை சர்வதேச அளவில் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் 7 பேரும் மாணவிகள் 3 பேரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். 3 தங்கம்,3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனர்.

Exit mobile version