விடியா திமுக ஆட்சியில் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் – எதிர்க்கட்சித் தலைவர்!

விடியா திமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டதாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டத்தை விடியா திமுகவினர் நடத்தி வருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் சட்டம், ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த விடியா திமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும், தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டதாகவும், காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்? என கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version