ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும்- அமைச்சர் பாண்டியராஜன்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் தனியார் மண்டபத்தில் நாடார்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்சியில் கலந்து கொண்ட அமைச்சார் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டில் தமிழக அரசு வெற்றி பெறும் என்று கூறினார். 25 விதிமுறைகளுடன் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய இந்த தீர்ப்பை மக்கள் ஏற்று கொண்டார்களா? என்பதை ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என கூறிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதுபோல் தீர்மானம் நீறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் இருந்து அனைத்து தொழில் நிறுவனங்களும் வெளியேற்றப்படும் நிலை உண்டாகும் என குறிப்பிட்டார்.

Exit mobile version